காதலிக்க கூடதென்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைந்தேன்

நீ 
என்னோடு  
பேசிய வார்த்தைகளுக்கு 
உயிர் ஊட்டி 
பூக்களாய் வளர்த்து 
வைத்திருக்கிறேன் 
என் வீட்டுத் தோட்டத்தில்  


நீயும் நானும் 
சுற்றி திரிந்த வீதிகளில் 
நான் மட்டும் 
தனியாக 

ஒரே ஒரு முறை 
பார்வையில் 
முழுவதுமாய் 

தீண்டிவிட்டுப்  போகும்
இளசு, பெருசுகளுக்கு 
மத்தியில் 
நீ மட்டும் 

எவனையும் 
காதலிக்க கூடதென்று  
கங்கணம் கட்டிக்கொண்டு  அலைந்தேன் 

உன்னை மட்டும் 
எப்படி ...?                                                                                      சுரேஹா